×

குக்கிராமங்களில் கூட பைப் லைன் அமையுங்கள்: குடிநீர் விநியோகம் கண்காணிக்க தனிக்குழு

கரூர், மே 9: குக்கிராமங்களில் கூட பைப் லைன் அமையுங்கள், குடிநீர் விநியோகம் கண்காணிக்க தனிக்குழு அமைக்க வேண்டும். 2 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் அதிரடி உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட சூடாமணி ஊராட்சி மல்லநத்தம், சின்னதாராபுரம், டி.வெங்கிடாபுரம், புலியம்பட்டி, க.பரமத்தி ஆகிய கிராம ஊராட்சி பகுதிகளில் குடிநீர் பணிகளை மாவட்ட கலெக்டர் தங்கவேல், காவரி குடிநீர் விநியோகம் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சூடாமணி ஊராட்சி எல்லைமேடு அருகே சூடாமணி ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கோடை கால தண்ணீர் பந்தல் மாவடட கலெக்டரால் திறந்து வைக்கப்பட்டது. இதில், பொதுமக்களுக்கு மோர் மற்றும் ஒஆர்எஸ் கரைசல் தொடர்ச்சியாக வழங்கிட கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்பு, சூடாமணி ஊராட்சி மல்லநத்தம் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 95 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து ஊராட்சியின் இதர கிராமங்களில் உளள மேல்நிலை தொடடிக்கு செல்லும் குடிநீர் விநியோகம் ஆய்வு செய்யப்பட்டது. இதில், குடிநீர் விநியோகம் செய்யப்படாத ஐந்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு இரண்டு நாட்களில் குடிநீர் ஏற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அடுத்ததாக, சின்னதாராபுரம் டி.வெங்கிடாபுரம் மற்றும் புளியம்பட்டி குடீநீர் வடிகால் வாரியம் மூலம் 3 லட்சம் லிட்டா கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டியில் இருந்து (சம்ப்) ஊராட்சியின் இதர கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் விநியோகத்தை ஆய்வு செய்தார். இதில, ஊராட்சி மன்ற தலைவரால் தெரிவிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படாத நான்கு பகுதிகளுக்கு சனிக்கிழமைக்குள் உடனடியாக குடிநீர் விநியோகம் செய்திட பொறியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து. க.பரமத்தி ஊராட்சியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து ஊராட்சியின் இதர குக்கிராமங்களில் உள்ள தொட்டிக்கு செல்லும் குடிநீர் விநியோகத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். இதில், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யாத பகுதிகளில் விநியோகம் செய்திட இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். க.பரமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து குக்கிராமங்களிலும் உடனடியாக பைப்லைன் அமைத்து போர்க்கால அடிப்படையில பணிகளை முடித்திட குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கும் உத்தரவிடப்படடது. மேலும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்திடவும், அதனை தனிக்குழு அமைத்து கண்காணித்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வி, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் வீராச்சாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரவணன், உதவி பொறியாளர் மரியாதேவி உட்பட அனைவரும் கலநது கொண்டனர்.

The post குக்கிராமங்களில் கூட பைப் லைன் அமையுங்கள்: குடிநீர் விநியோகம் கண்காணிக்க தனிக்குழு appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur District ,Collector ,Thangavel ,K. Paramathi Union ,Dinakaran ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...